நண்பனுக்காக....
'பறவைகள் விதைப்பதும் அறுப்பதும் இல்லை. பத்திரப்படுத்தி வைப்பதும் இல்லை' -வேதகாமம்
Wednesday, July 31, 2013
கே.ஆர்.பி.செந்தில்: Ship of Theseus - அற்புதமான படம்...
கே.ஆர்.பி.செந்தில்: Ship of Theseus - அற்புதமான படம்... arumai annaa...
Friday, September 7, 2012
தூக்கு...
மூடப்பட்டு
எல்லா வழிகளும் அடைபட்டு
கருனை மனுவின்
கடைசிப் பக்கங்களில்
தீர்மானத்திற்கு இசைவாக
கையெழுத்திடப்பட்டு
நட்ச்சதிரங்களை தொலைத்த
ஆகாயமென
ஒரு வாழ்வின் முடிவை
அறிவித்து காத்திருக்கிறது
நீதி மன்றம்..
வாதி
பிரதிவாதிகள்
ஆதரவாகவும்
எதிர்ப்பாகவும்
பத்திரிகைகள் பலவாகவும்
பார்த்து
படித்து
சலித்து
நகரும்
என் வாழ்வின்
கடைசி இரவில்
விடியல்
மிகத் தூரமாய் தெரிகிறது..
Friday, December 16, 2011
அதே நான்.. வேறு நீ...
மெல்லியதோர் புன்னகையால்
மனதைக்கீறியவள் நீ
நீதான்
நீ மட்டும்தான் என்றிருந்தேன்
நீதான்
நீ மட்டுமே என்றானாய்..
இப்போது நீ
அதே நான்
ஆனால்
வேறு நீ
அதே நான்..
எப்போதும் போலவே
அதே நான்
வேறு நீ
வேறு வேறுதான் என்றாலும்
மாறாத காதல் நான்
மாறும் போதை நீ..
கிளைகளைத் தாண்டிய பறவையொன்று
காற்றின் திசைகளால்
காலத்தினை கடக்கிறது
கடல் கடந்து..
மனதைக்கீறியவள் நீ
நீதான்
நீ மட்டும்தான் என்றிருந்தேன்
நீதான்
நீ மட்டுமே என்றானாய்..
இப்போது நீ
அதே நான்
ஆனால்
வேறு நீ
அதே நான்..
எப்போதும் போலவே
அதே நான்
வேறு நீ
வேறு வேறுதான் என்றாலும்
மாறாத காதல் நான்
மாறும் போதை நீ..
கிளைகளைத் தாண்டிய பறவையொன்று
காற்றின் திசைகளால்
காலத்தினை கடக்கிறது
கடல் கடந்து..
Monday, April 25, 2011
முதலும்.. முடிவும்...
முதல் பார்வையிலேயே
உன்னை காதலிக்கும் தீர்மானத்தை
என்
நெஞ்சத்தில் எழுதி வைத்தேன் ..
பிரத்யோகமான முயற்சிகளால்
நம் சந்திப்புகளை
ஏற்படுத்திய நண்பர்களுக்காய்
கணிசமாக கரைந்தது
அப்பன் சொத்து..
உனக்கும் என்னை
பிடிக்க ஆரம்பித்தபின்
விருப்பங்களை தோள் மாற்றி
சுமக்கத் துவங்கினோம்..
புரிதலற்ற ஒரு விவாதத்தின்
முடிவில்
தயாரானது
நம் காதலுக்கான இறுதி ஒப்பந்தம்..
Thursday, February 3, 2011
யாத்திரையின் முடிவில்
யாசிக்க முடியாத காதலை
சுவாசித்துக்கொண்டிருப்பவன்
நான்..
இன்னும்
யோசித்துக்கொண்டிருக்கிறாய்
நீ..
தவிர்க்க முடியாத
சந்திப்பில்
தலை திருப்பிக்கொண்டாலும்
நினைப்பில் நானிருப்பேன்
மறுக்கமுடியுமா?
நீ..
என் பாதைக்கு திரும்பும்
காலம்
நான்..?
யாத்திரையின் முடிவில்
அன்பின் துயரம்..
சுவாசித்துக்கொண்டிருப்பவன்
நான்..
இன்னும்
யோசித்துக்கொண்டிருக்கிறாய்
நீ..
தவிர்க்க முடியாத
சந்திப்பில்
தலை திருப்பிக்கொண்டாலும்
நினைப்பில் நானிருப்பேன்
மறுக்கமுடியுமா?
நீ..
என் பாதைக்கு திரும்பும்
காலம்
நான்..?
யாத்திரையின் முடிவில்
அன்பின் துயரம்..
Tuesday, August 10, 2010
மௌன அஞ்சலி ..............................
என் மரணத்திற்கு அவள்
மௌன அஞ்சலி செலுத்தினாள்............
அவளுக்கு தெரியவில்லை ..........
என் மரணத்திற்கு அவள் ..
மௌனம் தான் காரணமென்று ......................
மௌன அஞ்சலி செலுத்தினாள்............
அவளுக்கு தெரியவில்லை ..........
என் மரணத்திற்கு அவள் ..
மௌனம் தான் காரணமென்று ......................
Friday, August 6, 2010
நான் இழந்த நட்பு .................
எனக்கு முன் உருவாகி
எனக்கு முன் உதிர்ந்ததேன் ..
ரோமங்கள் சிலிர்க்கின்றன
இதயங்கள் மௌனமாய் அழுகின்றன
கண்ணீரில் வார்தைகள் கரைந்து போகின்றன ...
நிகழ்காலம் எதிகாலம் இரண்டையும் இறந்தகாலம் ஆக்கிவிட்டு
நிறைந்த நித்திரையில் நீ ........
மீளா துயரில் நான் .............
உன்னோடு சண்டையிட்ட காலத்தயும்
சமாதனமான நேரத்தையும்
அன்பு கொண்ட பொழுதுகளும்
வம்பு வளர்த்த இரவுகளும் ....
தொண்டை வரை வந்து தொந்தரவு செயுதுடா ............
மலராய் மலர்ந்த உன் புன்னகைக்கு .........
மலர்களால் அஞ்சலி ...................
கவிதையாய் ஜொலித்த நம் நட்புக்கு ..........
கண்ணீரால் அஞ்சலி ...........................
எனக்கு முன் உதிர்ந்ததேன் ..
ரோமங்கள் சிலிர்க்கின்றன
இதயங்கள் மௌனமாய் அழுகின்றன
கண்ணீரில் வார்தைகள் கரைந்து போகின்றன ...
நிகழ்காலம் எதிகாலம் இரண்டையும் இறந்தகாலம் ஆக்கிவிட்டு
நிறைந்த நித்திரையில் நீ ........
மீளா துயரில் நான் .............
உன்னோடு சண்டையிட்ட காலத்தயும்
சமாதனமான நேரத்தையும்
அன்பு கொண்ட பொழுதுகளும்
வம்பு வளர்த்த இரவுகளும் ....
தொண்டை வரை வந்து தொந்தரவு செயுதுடா ............
மலராய் மலர்ந்த உன் புன்னகைக்கு .........
மலர்களால் அஞ்சலி ...................
கவிதையாய் ஜொலித்த நம் நட்புக்கு ..........
கண்ணீரால் அஞ்சலி ...........................
Subscribe to:
Posts (Atom)