Friday, September 7, 2012

தூக்கு...

எல்லா செவிகளும்
மூடப்பட்டு
எல்லா வழிகளும் அடைபட்டு
கருனை மனுவின்
கடைசிப் பக்கங்களில்
தீர்மானத்திற்கு இசைவாக
கையெழுத்திடப்பட்டு
நட்ச்சதிரங்களை தொலைத்த 
ஆகாயமென 
ஒரு வாழ்வின் முடிவை
அறிவித்து காத்திருக்கிறது
நீதி மன்றம்..
வாதி
பிரதிவாதிகள்
ஆதரவாகவும்
எதிர்ப்பாகவும் 
பத்திரிகைகள் பலவாகவும்
பார்த்து 
படித்து
சலித்து
நகரும் 
என் வாழ்வின் 
கடைசி இரவில்
விடியல் 
மிகத் தூரமாய் தெரிகிறது..

No comments:

Post a Comment