Wednesday, July 14, 2010

மழையும்.. காதலும்..



















ஒரு குடையின் கீழ்
நாம் இருவரும்
குடை மறைத்த பாதியும்
மழை நனைத்த மீதியுமாய்
நனைய..
நனைய...
ஈரமான மனதை
இறுக்கிப் பிழிந்தது
நம் காதல்..

மழை முடிந்து
குடை சுருக்கியபின்னும்
விடை பெற்று
வீடு வந்த பின்னும்
வெளியில் விட்ட மழை
மனதில்
பெய்துகொண்டே இருக்கிறது..

ஷவரில் குளிக்கிறேன்
எனக்கு மட்டுமான
செயற்கை மழை ..


என்னோடு நீயும் கற்பனைக்
குளியல்..


உன் வீட்டிலும்
அப்படித்தானா?...

3 comments:

  1. அருமை நன்பரே

    ReplyDelete
  2. என்னது காதல் வழியுது?? :-)

    ReplyDelete
  3. காதல்-
    கவிதையில் மழையை பொழிந்திருக்கிறது .

    படித்தபின் துவட்டமுடியாமால்
    துவட்ட விருப்பமில்லமால்
    கவிமழை நின்றபின்னும்
    நனைந்து கொண்டே நிற்கின்றேன்
    உன் காதல்வழி
    என் காதலில்...

    இளமையை கடந்தோர்
    எல்லோர் உள்ளமும்
    என்னைப்போலவே சொட்டசொட்ட நனைந்திருக்கிறது.

    தொடர்க....வெல்க.

    அன்புடன்,
    இரா.சாமித்துரை

    ReplyDelete